<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,37,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 23 2026 15:44:16 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260624T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="24062026-CBE-04" position.sequence="04" ex-ref="24062026-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20"> கோவை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">24.06.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="67">‘அண்ணன் பவருக்கு வந்தால் தமிழ்நாடு மாறும்’  என்றார்கள்! ஆனால் அவர்</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="64">கைக்கு ‘ பவர்’ வந்தவுடன்  தமிழ்நாட்டுக்கே ‘பவர்’   போய் விட்டது!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="36">சட்டப் பேரவையில் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை...   முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup609446_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup588852_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup588779_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup588724_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="1_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏதா­வது திட்­டங்­கள் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்­களா. ஏதா­வது சாத­னை­கள் செய்­தி­ருக்­கி­றார்­களா என்று ஆவ­லு­டன் காத்­துக்­கொண்­டி­ருந்­தோம். ஆனால், எங்­க­ளுக்கு வெறும் ஏமாற்­றம் மட்­டுமே மிஞ்­சி­யது. அப்­படி எது­வும் ஆளு­நர் உரை­யில், எங்­கள் கண்­க­ளுக்­குப் பட­வில்லை, எங்­கள் காது­க­ளுக்­குக் கேட்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பின்­போது, நான் பேசும்­போது குறிப்­பிட்­டுப் பேசி­னேன். `ஆளு­நர் வரு­வார், அவர் பேசும்­போது, `தமிழ்த்­தாய் வாழ்த்­து’க்கு முத­லி­டம் கொடுங்­கள்’ என்று சொன்­னேன். அதே­போல் தமிழ்த்­தாய் வாழ்த்­தும் முத­லில் பாடப்­பட்­டது. உட­ன­டி­யாக, தேசிய கீத­மும் பாடப்­பட்­டது. தமிழ்த்­தாய் வாழ்த்து ஒரு முறை­யும், தேசிய கீதம் இரண்டு முறை­யும் பாடப்­பட்­டது. மரபு மீறல் நடந்­தி­ருக்­கி­றது. இது­வரை கடைப்­பி­டிக்­கப்­பட்டு வந்த மரபை மீறி, இரண்டு முறை தேசிய கீதம் பாடப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தமிழ்த்­தாய் வாழ்த்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதே கோரிக்­கையை, இதற்கு முன்பு இருந்த ஆளு­நர் எங்­கள் ஆட்­சிக்­கா­லத்­தில் வைத்­தி­ருந்­தார். ஆனால், எங்­கள் தலை­வர் அப்­பொ­ழுது மிக உறு­தி­யாக இருந்து, இந்த அவை­யின் இறை­யாண்­மையை நாங்­கள் பாது­காத்­தி­ருக்­கி­றோம். பத­வி­யேற்­பு­தான் ஆளு­நர் மாளி­கை­யில் நடந்­தது. அங்கு அவர் கேட்­டுக்­கொண்­ட­படி, தேசிய கீதம், வந்தே மாத­ரம் எல்­லாம் பாடி­னார்­கள். இப்­பொ­ழுது ஆளு­நர் உரை மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிர­தி­நி­தி­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் பணி­செய்­கின்ற இந்­தச் சட்­ட­மன்­றத்­தில்­தான் வாசிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது நம் டெரிட்­டரி (Territory). நம் டெரிட்­ட­ரியை ஆளு­ந­ரி­டம் கொடுக்­கின்ற அள­வுக்கு என்ன சம­ர­சம் (Compromise) நடந்­தது என்று மக்­கள் கேட்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே, நாங்­கள் கேட்­டுக்­கொண்­ட­படி தமிழ்த்­தாய் வாழ்த்தை முத­லில் பாடி­விட்­டீர்­கள். பொது­வாக, இந்த அவை­யில் இருக்­கின்ற மரபு, கடந்த ஆட்­சிக் காலங்­க­ளில், `தமிழ்த்­தாய் வாழ்த்து’ ஒரு முறை­யும், நிகழ்ச்சி முடிந்த பிறகு `தேசிய கீதம்’ ஒரு முறை­யும் பாடப்­பட்­டு­தான் நிகழ்ச்­சி­கள் முடி­யும். ஆனால், இந்த முறை நாங்­கள் கேட்­பது, ஏன் இரண்டு முறை `தேசிய கீதம்’ பாடப்­பட்­டது என்­பது மட்­டும்­தான் எங்­க­ளின் கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்த்­தாய் வாழ்த்­தை­யும் இரண்டு முறை நீங்­கள் பாடச் சொல்லி, உங்­க­ளின் ஆளு­ந­ரி­டம் ஒரு கோரிக்கை வைத்­தி­ருக்­க­லாம். அதை இங்கு பேசும்­போது, உறுப்­பி­னர்­கள் எல்­லாம் ஆளு­நர் அவ்­வ­ளவு மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றார் என்று சொல்லி, ஆளு­ந­ரை­விட நீங்­கள் மிக­வும் மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றீர்­கள். தமிழ்த்­தாய் வாழ்த்தை நாங்­கள், ஆளு­நர் முன்பு பாடிக் காட்­டி­விட்­டோம் என்று பெருமை பொங்க இங்கு பேசிக்­கொண்­டி­ருக்­கி­றீர்­கள். நீங்­கள் சொல்­வ­தைப் பார்த்­தால் `தமிழ்த்­தாய் வாழ்த்­தை’­­விட, ஆளு­நர்­தான் உங்­க­ளுக்கு முக்­கி­யம் என்­கிற எண்­ணம் எங்­க­ளுக்­கும் ஏற்­ப­டு­கி­றது, மக்­க­ளுக்­கும் ஏற்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">உங்­க­ளுக்கு ஆளு­நர் முக்­கி­யமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வைர் அவர்­களே, மீண்­டும் அதைத்­தான் நாங்­கள் கேட்­கி­றோம். `தமிழ்த்­தாய் வாழ்த்து’ ஒரு­முறை பாடி­விட்­டீர்­கள், அதற்கு வாழ்த்­து­கள். ஏன் `தேசிய கீதம்’ இரண்டு முறை பாடப்­பட்­டது? அப்­போது ஆளு­நர் அவர்­க­ளுக்கு நீங்­கள் கோரிக்கை வைத்­தி­ருக்­க­லாமே? `தேசிய கீதம்’ இரண்டு முறை பாடப்­பட வேண்­டும் என்­றால், நாங்­கள் `தமிழ்த்­தாய் வாழ்த்து’ இரண்டு முறை இல்லை, மூன்று முறை பாடு­வோம் என்று சொல்லி, அதை நீங்­கள் செய்து காட்­டி­யி­ருக்க வேண்­டும். அதைத்­தான் நான் கேட்­கி­றேன். உங்­க­ளுக்கு ஆளு­நர் முக்­கி­யமா, தமிழ்த்­தாய் வாழ்த்து முக்­கி­யமா என்று இந்த அர­சி­டம் நான் கேட்க விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">`ஆட்­டுக்­குத் தாடி­யும் நாட்­டுக்கு ஆளு­ந­ரும் தேவை­யில்லை’ என்று சொன்­ன­வர் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள். அவரை உங்­கள் கொள்­கைத் தலை­வர் பட்­டி­ய­லில் சேர்த்­துள்­ளீர்­கள். இன்­றைக்கு ஆளு­ந­ரைத் தலை­யில் வைத்­துக் கொண்­டா­டிக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே, கள யதார்த்­தத்­திற்­கும் ஆளு­நர் உரைக்­கும் மிகப்­பெ­ரிய வேறு­பாடு இருக்­கி­றது. ஆளு­நர் உரை என்­பது, அர­சின் கொள்­கை­களை, திட்­டங்­களை Mission and VisionStatement என்று சொல்­வார்­கள். அதன்­படி அமைந்­தி­ருக்க வேண்­டும். ஆனால், இந்த அர­சின் ஆளு­நர் உரை­யில் இருக்­கிற அனைத்து கன்­டென்­டு­க­ளும், ஆளும்­கட்­சி­யி­னர் சமூக வலை­த­ளத்­தில் `ரீல்ஸ்’ போடு­வ­தற்கு உத­வுமே தவிர, உண்­மை­யான (Real) பிரச்­சி­னை­ க­ளுக்­குக் கைக்­கொ­டுக்க, உத­வு­வ­தாக எந்த சொல்­யூ­ஷ­னும் (Solution) தரு­வ­தாக எங்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வழக்­க­மாக எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள், எதிர்க்­கட்­சி­கள் ஆளுங்­கட்­சி­க­ளின் நிறை குறை­க­ளைப் பேசு­வது வழக்­கம். அது­தான் எதிர்க்­கட்­சி­யின் கடமை. ஆனால், இப்­போது இருக்­கிற ஆளுங்­கட்­சியை விமர்­சிப்­ப­தில், முந்­தைய எதிர்க்­கட்­சி­க­ளை­விட எங்­க­ளுக்கு அதி­கப் பொறுப்­பும் உரி­மை­யும் இருக்­கி­றது என்று நாங்­கள் நம்­பு­கி­றோம். அதற்கு கார­ணம், எங்­க­ளு­டைய கூட்­ட­ணிக் கட்­சி­யாக இருந்து, எங்­கள் உடன்­பி­றப்­பு­க­ளின் வாக்­கு­க­ளில்வெற்­றி­பெற்­ற­வர்­க­ளின் ஆத­ர­வில்­தான், எங்­க­ளின் தய­வில்­தான் இன்­றைக்கு இந்த அரசே நடந்து கொண்­டி­ருக்­கி­றது என்­பதை, நீங்­கள் கருத்­தில் கொள்­ள­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­னும் சொல்­லப்­போ­னால், எதிர்க்­கட்சி வரி­சை­யில் மட்­டு­மல்­லா­மல், ஆளுங்­கட்சி வரி­சை­யி­லும் எங்­க­ளின் வாக்­கு­கள் அமர்ந்­தி­ருக்­கின்­றன. ஆகவே, நான் ஏற்­க­னவே சொன்ன மாதிரி நாங்­கள் வெறும் எதி­ரிக்­கட்­சி­யாக இல்­லா­மல், ஆக்­க­பூர்­வ­மான எதிர்க்­கட்­சி­யாக செயல்­பட விரும்­பு­கி­றோம். அந்த வகை­யில், பல்­வேறு பிரச்­சி­னை­களை எடுத்து வைக்க விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">எட்­டாம் வகுப்பு வரை விரி­வாக்­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­லில், கடந்த இரண்டு மாதங்­க­ளாக எங்­க­ளின் வேண்­டு­கோளை ஏற்று, கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொ­கையை 15–ஆம் தேதி சரி­யாக மக­ளி­ரின் கணக்­கிற்கு (Account–க்கு) அனுப்­பி­ய­தற்கு, எங்­க­ளின் நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கின்­றோம். அதே­போல, எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­க­ளால் தொடங்­கப்­பட்ட முத­ல­மைச்­ச­ரின் `காலை உண­வுத்­திட்­டத்தை’ – ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்­பு­வரை நாங்­கள் கொடுத்­துக்­கொண்டு இருந்­தோம், அதை நீங்­கள் வரு­கிற செப்­டம்­பர் மாதம் தந்தை பெரி­யா­ரின் பிறந்த நாளி­லி­ருந்து எட்­டாம் வகுப்பு வரை விரி­வாக்­கம் செய்­யப்­போ­வ­தாக செய்­தி­க­ளில் பார்த்­தேன். எங்­க­ளின் திட்­டத்தை நீங்­கள் விரி­வாக்­கம் செய்­வ­தற்­காக மீண்­டும் எங்­க­ளின் பாராட்­டு­க­ளை­யும், நன்­றி­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் தொடங்­கிய `நான் முதல்­வன்’ திட்­டத்தை நீங்­கள் முடக்­கு­கிற முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளீர்­கள் என்று கேள்­விப்­பட்­டோம். தமிழ்­நாட்­டில் இருக்­கின்ற ஒவ்­வொரு இளை­ஞ­ரும், அவ­ர­வர் துறை­யில், `நான் முதல்­வன்’ என்று உரு­வாக வேண்­டும் என்று, இந்­தத் திட்­டத்தை எங்­கள் தலை­வர் கொண்டு வந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">41 லட்­சம் மாண­வர்­கள் பயன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த ‘நான் முதல்­வன்’ திட்­டத்­தில் மட்­டும் கடந்த நான்கு வரு­டத்­தில் 41 லட்­சம் மாண­வர்­கள் பய­ன­டைந்­தி­ருக்­கி­றார்­கள். ‘நான் முதல்­வன்’ திட்­டம் பள்­ளிக்­கூ­டம் செல்­லும் மாண­வர்­க­ளுக்கு, அடுத்து அவர்­கள் உயர்­கல்வி படிக்க வழி­காட்­டு­கி­றது. உயர்­கல்வி படிக்­கிற மாண­வர்­க­ளுக்கு, எங்கு சென்று வேலை செய்ய வேண்­டும் என்று வேலை­வாய்ப்­புக்­கான திறன்­க­ளைத் (Employability Skills–ஐ) நாங்­கள் வலி­மைப்­ப­டுத்­தி­யுள்­ளோம். முக்­கி­ய­மாக, ‘நான் முதல்­வன்’ திட்­டம் மூல­மாக, யு.பி.எஸ்.சி. (UPSC) போன்ற குடி­மைப் பணி­க­ளுக்­கான (Civil Services) தேர்­வுக்­குத்தயா­ரா­கும் மாண­வர்­க­ளுக்கு விடுதி (Hostel) வச­தி­யோடு பயிற்­சி­யும் வழங்­கப்­பட்­டுள்­ளது. முதல்­நி­லைத் தேர்­வுக்­குத் (Prelims) தேர்­வா­கும் மாண­வர்­க­ளுக்கு மாதம் 7,500 ரூபாய், முதன்­மைத் தேர்­வுக்­குத் (Mains) தேர்­வா­கும் மாண­வர்­க­ளுக்கு மாதம் 25,000 ரூபாய் என்று இந்த ‘நான் முதல்­வன்’ திட்­டத்­தின் மூலம் எங்­கள் அரசு கொடுத்­தது. அது­மட்­டு­மல்­லா­மல், டெல்­லிக்கு நேர்­கா­ண­லுக்­குச் (Interview–க்கு) சென்று வரு­வ­தற்­குத் தேவை­யான போக்­கு­வ­ரத்து கட்­ட­ணத்­தை­யும் அரசே ஏற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்ற ஆண்டு மட்­டும், தமிழ்­நாட்­டில் இருந்து யு.பி.எஸ்.சி. (UPSC) தேர்ச்சி பெற்ற 60 பேரில், 56 பேர் ‘நான் முதல்­வன்’ திட்­டத்­தின் மூலம் பயன்­பெற்­ற­வர்­கள். அதி­லும், குறிப்­பாக, அகில இந்­திய அள­வில் இரண்­டாம் இடம் பிடித்த சகோ­தரி ராஜேஸ்­வரி `நான் முதல்­வன்’ திட்­டத்­தால் பயன்­பெற்­ற­வர். இப்­ப­டிப்­பட்ட ‘நான் முதல்­வன்’ திட்­டத்­தைக் கைவிட வேண்­டிய அவ­சி­யம் என்ன என்­ப­தற்கு முத­ல­மைச்­சர் அவர்­கள் தன் பதி­லு­ரை­யில் விளக்­கம் கூற வேண்­டும் என்று நான் விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சமீ­பத்­தில் டெல்­லிக்­குச் சென்ற முத­ல­மைச்­சர் அவர்­கள், நிதி ஆயோக் கூட்­டத்­தில் பல்­வேறு விஷ­யங்­க­ளைப் பற்­றிப் பேசி­யி­ருக்­கி­றார். அதில் குறிப்­பாக, நம் தமிழ்­நாடு இந்­தி­யா­வி­லேயே இரண்­டா­வது பெரிய மாநி­ல­மாக பொரு­ளா­தா­ரத்­தில் உயர்ந்­தி­ருக்­கி­றது என்று பெரு­மை­யாக பேசி­யி­ருக்­கி­றார். தமிழ்­நாட்­டில் டாக்­டர் கலை­ஞர் அவர்­க­ளால் தொடங்கி வைக்­கப்­பட்டு, எங்­கள் தலை­வர் அவர்­க­ளால் வளர்க்­கப்­பட்டு, கடந்த ஆட்­சி­யில் என் கட்­டுப்­பாட்­டில் இருந்த மக­ளிர் சுய உத­விக்­கு­ழுக்­கள் மிக­வும் சிறப்­பா­கச் செயல்­ப­டு­கின்­றன என்று முத­ல­மைச்­சர் அவர்­கள் பேசி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">`ஸ்டிக்­கர்’ ஒட்­டு­கி­றார்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தி­யா­வி­லேயே தொழிற்­சா­லைப் பணி­யா­ளர்­க­ளாக (Factory workers) இருக்­கின்ற பெண்­க­ளில் 42 சத­வி­கித மக­ளிர் தமிழ்­நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள், தமிழ்­நாட்­டில் இருக்­கிற பெண்­கள் முன்­னேற்­றம், சுகா­தா­ரம் எல்­லாமே சிறப்­பாக இருக்­கி­றது என்று, நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் டெல்­லி­யில் சொல்லி இருக்­கி­றார். திரைப்­ப­டங்­க­ளில் பார்த்­தீர்­கள் என்­றால், ஒரே பாட்­டில் 5 நிமி­டத்­தில் ஏழை­யாக இருப்­ப­வன், பெரிய பணக்­கா­ரன் ஆகி­வி­டு­வான். ஆனால், நிஜத்­தில் ஒரு மாத ஆட்­சி­யில், தமிழ்­நாடு போன்ற மிகப்­பெ­ரிய மாநி­லத்தை, அந்த அள­வுக்கு வளர்த்­து­விட முடி­யாது. இந்­தச்சாத­னை­கள் எல்­லாம் யார் ஆட்­சிக் காலத்­தில் நடந்­தது என்று மக்­க­ளுக்­கும் தெரி­யும், மக்­க­ளும் பார்த்­துக்­கொண்டு இருக்­கி­றார்­கள் என்­பது முத­ல­மைச்­ச­ருக்­கும் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே, இந்த ஆட்­சி­யில் இன்­னொரு பழக்­க­மும் புதி­தாக வந்­தி­ருக்­கி­றது. எங்­க­ளு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில் நாங்­கள் எடுத்த நட­வ­டிக்­கை­யால், ஏதா­வது நல்­லது நடந்­தால், உடனே அதற்­குத் தங்­கள் பெய­ரில் `ஸ்டிக்­கர்’ ஒட்­டு­கி­றார்­கள். அதா­வது ‘வர­லாற்­றி­லேயே முதன்­முறை’ (First ever time in the history) என்று சொல்­கி­றீர்­கள். அப்­ப­டித் தவ­றாக சொன்ன சில பொய்ச் செய்­தி­களை குறிப்­பிட விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேருந்­து­க­ளில் மூத்த குடி­மக்­கள், பள்ளிமாண­வர்­கள் எல்­லாம் கட்­ட­ண­மில்­லா­மல் பய­ணம் மேற்­கொள்ள, இந்த ஆட்­சி­யில்­தான் முதன்­மு­த­லாக திட்­டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது என்று பொய்ச் செய்­தி­க­ளைப் பரப்­பி­விட்­டார்­கள். அர­சுப் பள்­ளி­க­ளில் வழங்­கப்­ப­டு­கிற பள்­ளிப் பைக­ளில் முத­ல­மைச்­சர் புகைப்­ப­டம் இல்­லா­மல் கொடுப்­ப­தா­கச் சொல்லி `பர்ஸ்ட் டைம் இன் தி ஹிஸ்ட்ரி’ என்று ஒரு டேக் போட்டு பொய்ச் செய்­தி­க­ளைப் பரப்­பிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். இவை­யெல்­லாம் எங்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், எங்­கள் திரா­விட மாடல் அர­சில் எங்­கள் முத­ல­மைச்­சர் கொண்டு வந்த திட்­டங்­கள். இப்­படி இவர்­கள் ஸ்டிக்­கர் ஒட்­டிய லிஸ்ட் மிகப்­பெ­ரிய லிஸ்ட்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கல்வி நிறு­வ­னங்­க­ளுக்­கும் தொட­ருமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­னொரு முக்­கி­ய­மான ஒரு விஷ­யம் பற்றி இந்த நேரத்­தில், நான் பதிவு செய்ய விரும்­பு­கி­றேன். ‘அற­நி­லை­யத்­து­றை­யின் அசை­யும் மற்­றும் அசையா சொத்­து­க­ளின் வரு­வாய் அதன் புனி­த­மான நோக்­கத்­திற்கு மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­ப­டும்’ என்று ஆளு­நர் உரை­யில் இருக்­கி­றது. இந்­தக் கருத்­தைப் பார்க்­கும்­போது, அற­நி­லை­யத்­து­றையே இருக்­கக் கூடாது என்று சொல்­கின்ற பா.ஜ.க–வின் குர­லா­கத்­தான் த.வெ.க. அர­சும் சொல்­கி­றதோ என்­கின்ற சந்­தே­கம் எங்­க­ளுக்கு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பா.ஜ.க–வும், வல­து­சா­ரி­க­ளும், ‘அற­நி­லை­யத்­துறை, பள்ளி, கல்­லூ­ரி­களை நடத்­தக்­கூ­டாது’ என்று சொல்­லிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இதற்­காக வழக்­குக் கூடத் தொடர்ந்து இருக்­கி­றார்­கள். இந்த நிலைப்­பாடு திரு­மண மண்­ட­பங்­கள், வணிக வளா­கங்­க­ளோடு நிற்­குமா அல்­லது கல்வி நிறு­வ­னங்­க­ளுக்­கும் தொட­ருமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­கள், முன்­னாள் அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் அதற்­கான சரி­யான விளக்­கத்­தைக் கொடுத்­தி­ருக்­கி­றார். இப்­பொ­ழுது இருக்­கின்ற அமைச்­சர் அவர்­க­ளும் சரி­யான விளக்­கத்­தைக் கொடுத்­தி­ருக்­கி­றார். கார் பார்க்­கிங் வசதி என்­ப­தும் ஒரு அத்­தி­யா­வ­சிய தேவை­தான். அது ஒன்­றும் தேவை­யில்­லா­தது இல்லை. இப்­பொ­ழுது பல­ரும் கார் வைத்­தி­ருக்­கி­றார்­கள். நான் கேட்­டுக்­கொள்­வது எல்­லாம், எங்­க­ளின் ஆட்­சி­யில் அற­நி­லை­யத்­துறை சார்­பாக நான்கு கல்­லூ­ரி­க­ளைத் திறந்­தி­ருக்­கி­றோம். அதில், ஆண்­டுக்கு 1,500 மாண­வர்­கள் படிக்­கி­றார்­கள். இந்த ஆட்­சி­யா­ளர்­கள் என்ன பண்­ணப் போகி­றார்­கள்? இவர்­கள் நிலைப்­பாடு என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டுக்கே பவர் போய்­விட்­டதே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே, தமிழ்­நாட்­டில் இருக்­கிற 12 மாந­க­ராட்­சி­க­ளி­லும், தூய்­மைப்­பணி செய்­வ­தைத் தனி­யார்­ம­யம் செய்­யப்­போ­வ­தா­கச் செய்­தி­கள் வரு­கின்­றன. கடந்த காலத்­தில், போரா­டிய தூய்­மைப் பணி­யா­ளர்­களை நேரில் சந்­தித்த இன்­றைய முத­ல­மைச்­சர், ஆட்­சிக்கு வந்­த­தும் தூய்­மைப்­ப­ணி­யா­ளர்­க­ளைப் பணி நிரந்­த­ரம் செய்­வோம் என்று அப்­போது வாக்­கு­று­தி­யும் கொடுத்­தி­ருக்­கி­றார். ஆனால், சொன்­ன­தற்கு நேர் எதி­ராக, தனி­யார்­ம­யம் என்று செய்­தி­கள் வந்­து­கொண்டு இருக்­கின்­றன. இதற்கு முத­ல­மைச்­சர் அவர்­கள் அவர் பதி­லு­ரை­யில் விளக்­கத்­தைத் தர வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே, சும்மா சொல்­ல­கூ­டாது தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் ஆட்­சிக்கு வந்த ஒரே மாதத்­திற்­குள், தங்­க­ளின் பெரம்­பூர் தொகு­தியை முதன்­மைத் தொகு­தி­யாக மாற்­றிக் காட்­டி­யுள்­ளார். `எதில் நம்­பர் ஒன்’ என்று பார்த்­தீர்­கள் என்­றால் இன்று தமிழ்­நாட்­டி­லேயே மின்­வெட்­டுப் பிரச்­சி­னை­யில் முத­லி­டத்­தில்இருப்­பது பெரம்­பூர் தொகு­தி­தான். ஆளுங்­கட்­சிக்­கா­ரர்­கள் என்ன பேசிக்­கொண்டு இருக்­கி­றார்­கள் தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">`அண்­ணன் பவ­ருக்கு வந்­தால், தமிழ்­நாடு மாறும்’ என்று பார்த்­தோம். ஆனால், `அண்­ணன் கைக்கு பவர் வந்த நாளி­லி­ருந்து தமிழ்­நாட்­டுக்கே பவர் போய்­விட்­டதே’ என்று இன்­றைக்கு ஆளுங்­கட்­சிக்­கா­ரர்­கள் பேசிக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">அறி­விக்­கப்­ப­டாத மின்­வெட்டு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் கேட்­டுக் கொள்­வ­தெல்­லாம் நீங்­கள் இந்த மின்­வெட்­டுப் பிரச்­சி­னை­யி­னால் தமிழ்­நாட்டை இருட்­டாக்கி முத­லீ­டு­க­ளைக் கோட்டை விட்­டு­வி­டா­தீர்­கள் என்­று­தான் உங்­களை எல்­லாம் நான் கேட்­டுக்­கொள்­கின்­றேன். அதே மாதிரி நம்­மு­டைய மின்­சா­ரத்­துறை அமைச்­சர், `இரண்டு நாட்­கள் பொறு­மை­யாக இருங்­கள், இரண்டு நாட்­கள் பொறு­மை­யாக இருங்­கள்’ என்று சொல்­லும்­போது எனக்கு அடுத்த இரண்டு நாட்­க­ளுக்­குத் தமிழ்­நாட்­டில் மின்­சா­ரம் இருக்­குமா இல்­லையா, இல்லை நாங்­கள் எல்­லாம் பொறு­மை­யாக இருக்க வேண்­டும் என்று அதைச் சிம்­பா­லிக்­கா­கச் சொல்­கி­றாரா என்­கிற சந்­தே­கம் எனக்கு இருக்­கி­றது. இன்­றைக்கு எங்கு பார்த்­தா­லும் அறி­விக்­கப்­ப­டாத ஒரு மின்­வெட்­டாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குடும்­பங்­கள் எல்­லாம் குழந்­தை­க­ளைக் கூட்­டிக்­கொண்டு வந்து, சாலை மறி­ய­லில் ஈடு­பட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள். சில நாட்­க­ளுக்கு முன்பு எங்­க­ளு­டைய திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பாக, அம்­பத்­தூ­ரில் ஒரு பொதுக்­கூட்­டம் ஏற்­பாடு செய்­தி­ருந்­தோம். அங்கே எங்­க­ளு­டைய முன்­னாள் அமைச்­சர், இப்­போ­தைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர் அண்­ணன் தங்­கம் தென்­ன­ரசு அவர்­கள் சிறப்­புப் பேச்­சா­ள­ரா­கச் சென்­றி­ருந்­தார். அவர் பேச ஆரம்­பித்த உடனே, மின்­சா­ரம் தடை­பட்­டு­விட்­டது. 30 நிமி­டம் வரைக்­கும் காத்­தி­ருந்து… காத்­தி­ருந்து… நாங்­கள் என்ன செய்­து­விட்­டோம், பொதுக்­கூட்­டத்தை அர­சுக்கு எதி­ரான ஒரு ஆர்ப்­பாட்­ட­மாக மாற்றி விட்­டோம். ஏனென்­றால் மின்­சா­ரமே வர­வில்லை, ஆர்ப்­பாட்­ட­மாக நடத்தி முடித்­து­விட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, இன்­றைக்­குத் தமிழ்­நாட்­டில் பல்­வேறு இடங்­க­ளில், திரு­வண்­ணா­ம­லை­யில் கிரி­வ­லப் பாதை­யில் மக்­கள் போகும்­பொ­ழுது, தின­சரி மின்­சா­ரத் தடை செய்­கி­றார்­கள். அவர்­க­ளு­டைய பாது­காப்பை, இன்­றைக்கு ஒரு மிகப்­பெ­ரிய கேள்­விக்­கு­றி­யாக ஆக்கி வைத்­தி­ருக்­கி­றது இந்த அரசு. செங்­கல்­பட்டு அருகே சூனாம்­பேட்­டில் கருப்­பாயி என்­கிற 75 வயது மூதாட்டி, அவர்­க­ளுக்கு உடம்பு சரி­யில்லை, வீட்­டில் வென்­டி­லேட்­டர் சப்­போர்ட்­டில் இருந்­த­பொ­ழுது, பவர் கட் ஏற்­பட்டு மூச்­சுத் திணறி இறந்து போய்­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பவர் இல்லை என்று, தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரி­டம் போய் கேட்­க­லாம் என்று பார்த்­தால், சட்­ட­மன்ற உறுப்­பி­னர் யார் என்று மக்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை. நிறைய பேருக்கு, நான் தவ­றா­கச் சொல்­ல­வில்லை, இங்கு இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள் புது­மு­கங்­கள். நமக்கே பாதிப் பேரை வெளி­யில் பார்க்­கும்­பொ­ழுது இவர் சட்­ட­மன்ற உறுப்­பி­னரா, இல்­லையா என்று தெரி­ய­வில்லை, உள்ளே வந்­தால்­தான் தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பள்­ளி­க­ளுக்கு விடு­முறை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முன்­ன­ரெல்­லாம் புயல், மழை நேரத்­தில் ஸ்கூலுக்கு லீவ் விடு­வார்­கள். ஆனால், இந்த ஆட்சி அமைந்த பிற­கு­தான் முதன்­மு­றை­யாக மின்­சா­ரம் இல்லை என்று பள்­ளி­க­ளுக்கு விடு­முறை விட ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்­கள். சென்னை, பெரம்­பூர் மற்­றும் வியா­சர்­பா­டி­யில் கடந்த ஜூன் 9–ஆம் தேதி­யன்று, நான்கு தனி­யார் பள்­ளி­க­ளுக்கு மின்­சா­ரம் இல்லை என்று விடு­முறை விட்­டார்­கள். முன்பு மழை வரும்­பொ­ழு­தெல்­லாம், பள்ளி மாண­வர்­கள் தொலைக்­காட்­சியை ஆன் பண்ணி இன்­றைக்­குப் பள்ளி இருக்­கி­றதா, இல்­லையா என்று தெரிந்­து­கொள்­வார்­கள். ஆனால், இப்­பொ­ழு­தெல்­லாம் டி.வி. ஆன் பண்­ண­வில்லை என்­றாலே தெரிந்­து­கொள்­கி­றார்­கள். சரி, இன்­றைக்கு மின்­சா­ரம் இல்லை, இன்­றைக்­குப் பள்ளி விடு­மு­றை­தான் என்று. எனவே ஒரு மிகப்­பெ­ரிய ஒரு மேம்­பட்ட தொழில்­நுட்­பத்தை (அட்­வான்ஸ் டெக்­னா­ல­ஜியை) இந்த அரசு உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எதிர்க்­கட்­சி­யான எங்­க­ளது பொதுக்­கூட்­டத்­தில்­தான் மின்­சா­ரத் தடை ஏற்­ப­டு­கி­றதோ என்று நாங்­கள் கூட நினைத்­துக் கொண்­டி­ருந்­தோம், வருத்­தப்­பட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­றி­ருக்­கக்­கூ­டிய விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யின் தலை­வ­ரான அண்­ணன் திரு தொல்.திரு­மா­வ­ள­வன் அவர்­க­ளும் மின்­சா­ரத் தடை­யால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார். விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யின் தலை­மை­ய­கத்­திற்கு முன்­னாள் ஒன்­றிய அமைச்­சர் அண்­ணன் ப.சிதம்­ப­ரம் அவர்­கள் போயி­ருக்­கி­றார். அவர் உள்ளே சென்ற உடனே மின்­சா­ரம் தடை­பட்­டு­விட்­டது. கிட்­டத்­தட்ட ஒரு மணி நேரம் இரண்டு பேரும் இருட்­டி­லேயே உட்­கார்ந்து பேசி­யி­ருக்­கி­றார்­கள். மின்­சா­ரம் வருமா, வராதா என்று. ஏ.சி. இயங்­க­வில்லை, வியர்த்­துக்­கொட்ட கொட்ட இரண்டு பேரும் பேசிக் கொண்­டி­ருந்­தி­ருக்­கி­றார்­கள் என்று அண்­ணன் திருமா அவர்­களே பதிவு செய்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த ஆட்­சி­யில் தமிழ்­நாட்­டின் தலை­ந­க­ரத்­துக்கே இது­தான் நிலைமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பவ­ரில் ஷேரிங் கொடுத்த ஆளுங்­கட்­சி­யால், அவர்­கள் அமைச்­ச­ர­வை­யில் இருக்­கக்­கூ­டிய கட்­சி­யி­னு­டைய அலு­வ­ல­கத்­திற்கு பவர், மின்­சா­ரம் கொடுக்க முடி­யா­மல் இன்­றைக்­குத் தடு­மா­றிக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>